ஒப்பந்தப்படி கூலி வழங்காததால், பொது வேலைநிறுத்தம் செய்யப்போவதாக விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் அறிவிப்பு!


கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு குறைத்து வழங்கப்படும் கூலியை ஒரு வார காலத்திற்குள் பெற்று தராவிட்டால் பொது வேலை நிறுத்தம் செய்யப்போவதாக விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் பழனிச்சாமி தெரித்துள்ளார்.



கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் பழனிச்சாமி மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு ஒன்று அளித்துள்ளார். அதில் 2014ம் ஆண்டு ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும், விசைத்தறி உரிமையாளர்களுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தப்படி கூலி வழங்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற பேச்சு வார்த்தை அடிப்படையில் புதிய ஒப்பந்தம் போடப்பட்டு அதன் அடிப்படையில் கூலி வழங்க வேண்டிய ஜவுளி உற்பத்தியாளர்கள், தொழில் மந்த நிலையை காரணம் காட்டி கூலியை குறைத்து வழங்குவதாகவும், இது குறித்து கோவை திருப்பூர் மாவட்ட ஆட்சியர்களுக்கு மனு அளித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தற்போது 2011ம் ஆண்டு வழங்கிய கூலியையும் ஜவுளி உற்பத்தியாளர்கள் பிடித்தம் செய்வதாகவும், உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்கள் என முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தி குறைக்கப்பட்ட கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் ஒரு வார காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் பொதுக்குழு தீர்மானத்தின்படி கால வரையற்ற பொது வேலை நிறுத்தம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...