கோவையில் பூட்டியிருந்த வீட்டில் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

கோவை பீளமேட்டில் கதிரேசன் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் தங்க நகை, 1.5 லட்சம் ரூபாய் பணம், வெள்ளி பொருட்கள் மற்றும் அமெரிக்க டாலர்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை பீளமேடு அருகேயுள்ள சேரன் மாநகர் மெளனசாமி நகரைச் சேர்ந்தவர் கதிரேசன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவிஜெயராணி. இவர் கடந்த 9-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு, அதேப் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். நேற்று காலை மீண்டும் அவர் கோவைக்கு திரும்பினார்.

வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பொருட்கள் கலைந்து கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.1.50 லட்சம் தொகை, 19 பவுன் நகை, 4,800 எண்ணிக்கையிலான அமெரிக்க டாலர்கள், 160 கிராம் வெள்ளிப் பொருட்கள் ஆகியவை கொள்ளைபோயிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவர் அளித்த புகாரின் அடிப்படையில், பீளமேடு போலீஸார் வழக்குப்பதிவு கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களைத் தேடிவருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...