கோவை ஈசா யோகா மையத்தில் ஆதியோகி சிலை திறப்பு விழாவிற்கு தடைவிதிக்க கோரிக்கை.


கோவை ஈசா யோகா மையத்தில் மலை தள பாதுகாப்பு துறை அனுமதி இன்றி அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி சிலை திறப்பு விழாவிற்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் இல்லையெனில் சிலை திறப்பு விழாவிற்கு வரும் பிரதமர் நரேந்திரமோடிக்கு கருப்பு கொடிகாட்டப்போவதாக சமூக நீதிக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

கோவையை அடுத்த வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈசா யோகா மையமானது அமைந்துள்ளது. இங்கு 112 அடி உயரத்தில் பிரமாண்டமாக ஆதியோகி சிலையானது அமைக்கப்பட்டுள்ளது. வரும் 24ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி சிலையை திறந்து வைக்கின்றார். இந்நிலையில் ஈசா யோகா மையமானது மலைதள பாதுகாப்பு துறையிடம் சிலை அமைக்க அனுமதி பெறவில்லை எனவும் அனுமதி இன்றி அமைக்கப்பட்ட சிலை திறப்பு விழாவிற்கு அனுமதி வழங்க கூடாது எனவும் கூறி கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிகரனிடன் சமூக நீதிக்கட்சியினர் இன்று மனு அளித்தனர். மேலும் அனுமதி பெறாத சிலையை திறக்க இந்திய பிரதமர் மோடி வந்தால் அவருக்கு கருப்பு கொடிகாட்டப்போவதாகவும் சமூக நீதிக்கட்சியினர் தெரிவித்தனர்.

மேலும் அனைத்து இடங்களிலும் வைக்கப்பட்டுள்ள  ஆதியோகி சிலை திறப்பு தொடர்பாக ஈசா மையம் வைத்துள்ளா விளம்பரங்களை அகற்ற வேண்டும் எனவும் சமூக நீதிக்கட்சியினர் தெரிவித்தனர். மேலும் கோவையில் அனைத்து துறைகளிலும் அனுமதி பெற்ற நிலையில் அம்பேத்கர் சிலையை அமைக்க அனுமதிக்காத மாவட்ட நிர்வாகம், மலைதள பாதுகாப்பு துறையில் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி சிலையை திறக்க அனுமதித்துள்ளதாகவும் சமூக நீதிக்கட்சியினர் குற்றம்சாட்டினர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...