வடகோவை அருகே தண்டவாளத்தில் கிடந்த சடலம் - ரயில்வே போலீசார் விசாரணை!

வடகோவை ரயில்நிலையம் அருகேயுள்ள தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் கிடந்த 40 மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்ட ரயில்வே போலீசார் விபத்தா? தற்கொலையா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கோவை வடகோவை ரயில்நிலையம் அருகே ரயிலில் சிக்கி ஒருவர் பலியான நிலையில், விபத்தா, தற்கொலையா என ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடகோவை ரயில் நிலையம் அருகேயுள்ள ரயில்வே தண்டவாளத்தில் 40 வயது மதிக்கதக்க நபர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இந்நிலையில், அந்த வழியாக சென்றவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து கோவை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக உதவி காவல் ஆய்வாளர் ராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? இது விபத்தா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...