தாராபுரத்தில் பி.ஏ.பி வாய்க்கால் பாசன பகிர்மானக்குழு நிர்வாகிகள் தேர்வு - போட்டியின்றி தேர்வான தலைவர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் காங்கேயம், குண்டடம் பி.ஏ.பி. வாய்க்கால் பாசன பகிர்மான குழு தலைவர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், தலைவராக பாலசுப்பிரமணியம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம், குண்டடம் ஆகிய பி.ஏ.பி. கால்வாய் பகிர்மான குழு தலைவர்களுக்கான தேர்தல் தாராபுரம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நடைபெற்றது.

தேர்தலை ஆர்.டி.ஓ.வும், தேர்தல் அதிகாரியுமான குமரேசன் தேர்தலை நடத்தினார். அதில், காங்கேயம் பகிர்மான குழு தலைவராக பச்சாபாளையத்தை சேர்ந்த கிராம தலைவர், பாலசுப்பிரமணியம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.



அதேபோல் குண்டடம் பி.ஏ.பி கால்வாய் பகிர்மான குழு தலைவராக சடையபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவர்களுடன் பி.ஏ.பி கால்வாய் பகிர்மான குழு உறுப்பினர்களாக 10 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் ஆர்.டி.ஓ குமரேசன் வெற்றிபெற்றதுக்கான சான்றிதழ்களை வழங்கினார்.



தேர்வு செய்யப்பட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு காங்கேயம், தாராபுரம் பகுதியில் உள்ள நகர, ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, மாவட்ட துணை செயலாளர் முத்துக்குமார், வெள்ளகோவில் நகரச்செயலாளர் முருகானந்தம், ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், காங்கயம் நகர செயலாளர் வசந்தம். சேமலையப்பன், காங்கயம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தம், வடக்கு ஒன்றிய செயலாளர் கருணை பிரகாஷ், தாராபுரம் நகர செயலாளர் முருகானந்தம், குண்டடம் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்ட விவசாயிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...