கோவை விமானநிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல் - கள்ளக்குறிச்சி நபர் கைது

சார்ஜாவிலிருந்து விமானம் மூலம் சட்ட விரோதமாக கடத்திவரப்பட்ட ரூ-3.8 கோடி மதிப்பிலான தங்கத்தை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அர்ஜூன் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: சார்ஜாவில் இருந்து கோயம்புத்தூருக்கு ஏர்அரேபியா விமானம் வந்தது. அதில் சிலர் தங்கம் கடத்திவருவதாக வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் நுண்ணறிவு மற்றும் வருவாய் புலன் ஆய்வு துறை அதிகாரிகள் விமானத்தில் பயணித்து வந்த பயணிகளை சோதனையிட்டனர்.

அப்போது 11 பயணிகள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலான தங்கத்தை கொண்டுவந்திருப்பது தெரியவந்தது.

அந்த வகையில் ஷூ, ஜீன்ஸ் பேண்ட் உள்ளிட்டவற்றில் மறைத்துக் கொண்டு வரப்பட்ட 6.62 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் ஒட்டுமொத்த மதிப்பு 3.8 கோடி ரூபாய் ஆகும்.

தங்கம் கடத்தப்பட்ட விவகாத்தில் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அர்ஜுன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் பெரும்பாலும் தங்க சங்கிலிகளாகவே கடத்தி வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...