முதலுதவி செய்வது எப்படி..? - ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளித்த கோவை போலீசார்!

கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் மாநகர காவல்துறை சார்பில் வலிப்பு வந்தால் எப்படி காப்பாற்றுவது, கையில் அடிபட்டால் எப்படி காப்பாற்றுவது, அடிபட்டவரை எப்படி தூக்குவது என ஆட்டோ ஓட்டுநர்களுக்கு முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது.


கோவை: கோவை மாநகர காவல்துறை சார்பாக முதலுதவி செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.



கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் 200க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கோவை மாநகர காவல்துறை சார்பாக முதலுதவி செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.



இதில் வலிப்பு வந்தால் எப்படி காப்பாற்றுவது, கையில் அடிபட்டால் எப்படி காப்பாற்றுவது, அடிபட்டவரை எப்படி தூக்குவது எனப் பயிற்சி அளிக்கப்பட்டது.



அப்போது கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவை மாநகரில் 4,000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விபத்தில் சிக்குபவர்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்வது என்பது குறித்த பயிற்சி கொடுக்கப்படுகிறது. இன்று 200 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

ஒருவருக்கு விபத்து ஏற்பட்டால் அவருக்கு எப்படி உடனடியாக முதலுதவி கொடுக்க வேண்டும், எப்படி மருத்துவமனை அழைத்துச் செல்ல வேண்டும் என பல்வேறு வகையில் பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் மூலமாக முதலுதவி கொடுப்பதும், உயிர் இழப்பை தடுக்கவும், ரத்தக்கசிவை நிறுத்தவும் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. ஒரு மாதம் முழுவதும் நான்காயிரம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இந்த பயிற்சி கொடுக்கப்படுகிறது.

கோவையை பொருத்தவரை விபத்து பகுதிகள் என 47 ஹாட்ஸ்பாட் அறியப்பட்டுள்ளது. ஒரு விபத்து நடந்தால் பொதுமக்கள் தாமாகவே ஆம்புலன்சை அழைக்க வேண்டும். அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்,வழக்கு வந்துவிடுமோ என அச்சம் தற்போது குறைந்து வருகிறது.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...