கோவையில் டிஜிபி சைலேந்திரபாபுவை ரோஜா பூ கொடுத்து வரவேற்ற வடமாநில தொழிலாளர்கள்!

கோவை சரவணம்பட்டியில் உள்ள ஸ்ரீ ஆனந்தகுமார் மில்லில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் சந்தித்தார். வீடியோ வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தினார். தொழிலாளர்கள் டிஜிபி உடன் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.


கோவை: சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மில்லில் பணி புரியும் வடமாநில தொழிலாளர்களை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் சந்தித்தார்.



கோவையில் சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ ஆனந்தகுமார் மில்லில் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வருவதற்கு முன் வடமாநில தொழிலாளர்கள் சைலேந்திரபாபுவுக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர்.



அதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் மத்தியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், சேலம் மற்றும் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர்கள் மற்றும் துணை ஆணையாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தொழிலாளர்களுடன் இந்தியில் பேசி தொழிலாளர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தார். கோவை மாநகர காவல் துறை என்றும் புலம்பெயர் தொழிலாளர்களுடன் உறுதுணையாக இருக்கும் என்றும் உறுதி அளித்தார்.

மேலும் டிஜிபி தலைமையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தை தொழிலாளர்கள் வீடியோ எடுத்து தங்கள் குடும்பங்களுக்கு தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக அனுப்ப காவல்துறை சார்பில் அறிவுறுத்தினர்.

அதேபோல டிஜிபி சைலேந்திரபாபு முன்னிலையில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் ராஜேஸ்வரி தொழிலாளர்களுடன் இந்தியில் பேசினார். புலம்பெயர் தொழிலாளர்கள் டிஜிபி உடன் தனித்தனியாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.



சிலர் செல்பி எடுத்துக் கொண்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...