ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரி சார்பில் மாணவ, மாணவிகளுக்கான "ஹாக்கத்தான் 2017" நடைபெற்றது

கோவையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் கணினி திறன்பேசி மற்றும இணையம் சார்ந்த திட்டப் பணிகளை உருவாக்கும் போட்டி ஹாக்கத்தான் 2017 என்னும தலைப்பில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில், திறன்பேசிக்கான செயலிகள், இணையம் பயன்பாடுகள் மற்றும் "இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்" எனப்படும் அனைத்து பொருட்களையும் இணையத்தில் இணைக்கும் தொழில்நுட்பம் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளை 24 மணி நேரத்திற்குள் உருவாக்கும் போட்டியில் மாணவ, மாணவியர்கள் ஈடுபட்டனர்.



இதன் துவக்க விழாவானது கடந்த 17ம் தேதியன்று அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில், ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரி முதல்வர் சி.நடராஜன், ஹாப் க்ளூஸ் மனிதவளத்துறை தலைவர் பாபு விட்டல் மற்றும் பயோடா நிறுவனத்தின் மூத்த மனியவள அதிகாரி விஜயலட்சுமி உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

இதில், கல்லூரி முதல்வர் சி.நடராஜன் அனைவரையும் வரவேற்று துவக்கவுரையாற்றினார். அப்போது, இக்கல்லூரியின் வளர்ச்சி குறித்தும், மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். 



இதைத்தொடர்ந்து பேசிய பாபு விட்டல், மாணவர்கள் ஒரு விசயத்தை கையாளுகையில் தனது சிந்தனை திறன் மற்றவர்களை போல் இல்லாமல் புதிய கோணத்தில் இருக்க வேண்டும் என கூறினார். தொடர்ந்து, மாணவர்களிடையே கலந்துரையாடலில் ஈடுபட்டார்.



அடுத்து பேசிய விஜயலட்சுமி, "மாணவர்கள் சுயசிந்தனையுடன் சவால்களை சந்திக்க வேண்டும்" என்று கூறினார்.



இந்நிகழ்வின் நிரைவு விழாவில் ஐபிஎஸ் திலீப், இனோஸ்பேஸ் டாக்டர் விமல், டெக்மகேந்திரா நெல்சன், இம்பிசர் கணேஷ் கண்ணா, ராஜ்மோகன் ஆகியோர் மாணவர்கள் உருவாக்கிய செயலிகளை மேற்பார்வையிட்டு அதில் 10 சிறந்த போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.



Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...