கோவை பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு - தலைமறைவாக இருந்த இளைஞர் கைது!

கோவைப்புதூரில் கடந்த செப்டம்பர் மாதம் ஆர்.எஸ்.எஸ் கிளை அமைப்பின் தமிழக - கேரளா பொறுப்பாளர் ஆனந்த கல்யாணராமன் என்பவரது வீட்டு முன்பும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுதொடர்பாக குனியமுத்தூரை சேர்ந்த முகமது ஷபி என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: இந்தியாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்து மத்திய உள்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை கண்டித்து கோவையில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.

கோவைப்புதூரில் கடந்த செப்டம்பர் மாதம் ஆர்.எஸ்.எஸ் கிளை அமைப்பின் தமிழக - கேரளா பொறுப்பாளர் ஆனந்த கல்யாணராமன் என்பவரது வீட்டு முன்பும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய உதவி ஆணையர் ரகுபதி ராஜா, ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிர தேடுதல்வேட்டை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் கடந்த 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த முகமது ஷபி (வயது29) என்பவரை குனியமுத்தூர் செல்வம் நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று தனிப்படையினர் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், முகமது ஷபி, அடிக்கடி வீட்டை மாற்றிக்கொண்டு தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் வேறு வழக்குகளில் தொடர்பு உள்ளவரா? என்று விசாரணை நடைபெற்று வருகிறது. மற்ற அமைப்புகளில் உறுப்பினராக இல்லை. ஆனால் ஆதரவாக செயல்பட்டுள்ளார், என்று தெரிவித்தனர்.

கைதான முகமது ஷபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...