உடுமலை அருகே ஒற்றை யானை நடமாட்டம் - 2வது முறையாக பேருந்து கண்ணாடி உடைப்பு!

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே மறையூர் சாலையில் படையப்பா எனும் காட்டு யானையின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இரண்டாவது முறையாக அந்த வழியாக வந்த பேருந்தின் முன்பக்க கண்ணாடியை சேதப்படுத்தியது. பேருந்துக்குள் இருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக எல்லை பகுதியில் அமைந்துள்ள மறையூர் பகுதியில் கடந்த சில தினங்களாகவே படையப்பா என்ற ஓற்றைய யானை நடமாட்டம் அதிகரித்துள்ளது.

மேலும், குடியிருப்புகள் பகுதிகளில் சுற்றி திரிந்த யானை, கடந்த இரண்டு தினங்களாக சாலைகளில் உலா வந்து கொண்டுள்ளது.



இந்த நிலையில் இன்று காலையில் உடுமலையிலிருந்து மூணாறு சென்ற கேரளா அரசு பேருந்தை வழிமறித்து நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



பின்னர் பேருந்தின் முன்பகுதி பக்கவாட்டு பகுதியில் உருட்டிவிட முயற்சி செய்தபோது பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.



இதனால், உள்ளிருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஒரு மணி நேரம் கழித்து கழித்து யானை சாலையைக் கடந்து சென்றதும் பேருந்தில் இருந்த பயணிகள் நிம்மதியடைந்தனர். இதேபோல, கடந்த சில தினங்களுக்கு முன்பும் இரவு நேரத்தில் கேரளா அரசு பேருந்தை இதே படையப்பா என்ற யானை தாக்க முயன்றது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், உடுமலை மூணாறு வழித்தடத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம். எச்சரிக்கையாக செல்லுமாறு வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

சாலைகளில் யானைகள் நின்றிருந்தால் சோதனைச் சாவடிகளில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. சாலைகளில் வனவிலங்குகள் தென்பட்டால் அருகில் செல்லக்கூடாது. ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தக் கூடாது, என்றனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...