கோவையில் முதியவரைத் தாக்கி செல்போன், பணம் பறிப்பு - சிறுவர்கள் 3 பேர் கைது!

கோவை சிவானந்தகாலனி சாலையில் இரவில் பப்புசிங் என்ற முதியவர் நடந்து சென்றபோது, அவரை அடித்து துன்புறுத்தி செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்ற வழக்கில்16, 17 வயது என 3 சிறுவர்கள் கைதாகியுள்ளனர். தலைமறைவாகியுள்ள கிறிஸ்டோபர் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.


கோவை: கோவை நாகராஜபுரத்தை சேர்ந்தவர் பப்பு சிங் (வயது51). இவர் பேக்கரி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கேக் ஷாப் அமைந்திருக்கும் சிவானந்த காலனி சாலையில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தவழியாக வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது. அவரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளது.

அப்போது,பப்புசிங் என்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத கும்பல், அவரை அடித்து துன்புறுத்தி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் 2,200 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடியது.முதியவர் கூச்சலிட்டு உதவிக்கு பொதுமக்களை அழைக்கும் முன்னே வழிப்பறிக் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பினர்.

இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் பப்பு சிங் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், 16 வயது சிறுவர்கள் 2 பேர், 17 வயது சிறுவன் ஒருவர் ஆகியோர் பிடிபட்டனர்.தப்பியோடிய கிறிஸ்டோபர் என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். இரவு நேரத்தில் முதியவரைத் தாக்கிய பணம், செல்போன் பறிப்பில் சிறுவர்கள் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...