சோலையாறு அணை குடியிருப்பு பகுதியில் பாலம் அமைக்க பூமி பூஜை - நகர்மன்ற தலைவர் பங்கேற்பு

வால்பாறை நகராட்சிக்குட்பட்ட சோலையாறு அணை குடியிருப்பு பகுதிக்கு மழைக்காலங்களில் பொதுமக்கள் செல்ல நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.9.90 லட்சம் செலவில் பாலம் அமைப்பதற்கான பூமி பூஜையில் நகர்மன்ற தலைவர் அழகுசுந்தரவள்ளி கலந்து கொண்டு பூஜையைத் தொடங்கி வைத்தார்.


கோவை: சோலையாறு அணை குடியிருப்பு பகுதியில் மக்கள் நடந்து செல்ல பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட சோலையாறு அணை குடியிருப்பு பகுதியில் உள்ள மக்கள் மழைக்காலங்களில் பாதையைக் கடக்க சிரமமாக உள்ளதாகவும், பாலம் அமைத்து தரக்கோரியும் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.



பொதுமக்களின் கோரிக்கை ஏற்ற நகராட்சி நிர்வாகம் பாலம் அமைத்துத் தர உறுதியளித்தது. அதனடிப்படையில், ரூ.9.90 லட்சம் செலவில் அந்தப் பகுதியில் பாலம் அமைக்கவும், இதேபோல் நல்ல காத்து எஸ்டேட் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செல்லும் பாதையைச் சீரமைக்கவும், அப்பள்ளி மாணவர்கள் நலன் கருதித் தடுப்பு சுவர் கட்டுவதற்கும் பூமி பூஜை நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் அழகுசுந்தர வள்ளி மற்றும் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் செல்வம், வார்டு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், இந்துமதி, ஜெயந்தி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...