கோவையில் பெண் காவல் ஆய்வாளருக்கு பரிவட்ட மரியாதை - கோனியம்மன் கோயில் நிர்வாகம் கவுரவிப்பு!

கோவையில் சமீபத்தில் முடிந்த கோனியம்மன் கோயில் திருவிழாவில் திருட்டு சம்பவம் நடைபெறாமல் சிறப்பாக கண்காணிப்பு பணி மேற்கொண்ட பெண் காவல் ஆய்வாளர் லதாவிற்கு பரிவட்டம் கட்டி, கோயில் நிர்வாகத்தினர் மரியாதை செலுத்தினர்.


கோவை: கோவை மாநகரின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் கோவில் மாசி தேரோட்டம் நேற்று முன்தினம் வெகு விமர்சையாக நடந்து முடிந்தது. ஒவ்வொரு ஆண்டும் இந்த தேர் திருவிழாவிற்கு பெரிய கடை வீதி போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

இதற்காக, கோவில் நிர்வாகம் சார்பில் பெரிய கடை வீதி காவல் ஆய்வாளருக்கு பரிவட்டம் கட்டுவது வழக்கம். அதன்படி கோவில் நிர்வாகத்தார் பெரிய கடை வீதி காவல் நிலையத்திற்கு சென்று அங்கு இருந்த பெண் ஆய்வாளர் லதாவிற்கு பரிவட்டம் கட்டி, தேரை வடம் பிடித்து இழுக்க அழைப்பு விடுத்தார். பெண் போலீஸ் ஆய்வாளர்களுக்கு பரிவட்டம் கட்டுவது இதுவே முதல் முறையாகும்.



இதற்கு முன்பு, தேரோட்டத்திற்கு அங்கு பணியாற்றிய ஆண் ஆய்வாளர்கள் பரிவட்டம் கட்டப்பட்டு தேரை வடம் பிடிப்பர். இந்த முறை பெண் ஆய்வாளர் வடம் பிடித்து இழுத்துள்ளார். அவருடன் மாநகர துணை ஆணையர் சந்தீஷ் உள்ளிட்ட போலீசாரும் பரிவட்டம் கட்டியவாறு தேரோட்டத்தை நடத்தினர்.

ஒவ்வொரு ஆண்டும் கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவின்போது சின்ன சின்ன திருட்டு சம்பவங்கள் நடைபெறும். அதனை தடுக்கும் வகையில், இந்த ஆண்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் சாதாரண உடைகளில் மக்களுடன் மக்களாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதால் இந்த முறை ஒரு திருட்டு சம்பவம் கூட நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...