ஈரோடு தேர்தலில் வெற்றி - கோவை துடியலூரில் திமுகவினர் கொண்டாட்டம்!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கோவை துடியலூரில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியம் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.


கோவை: ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, துடியலூரில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் அதிமுக கூட்டணி வேட்பாளரை, விட திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார்.



இதைக் கொண்டாடும் விதமாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூரில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியம் தலைமையில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.



இந்நிகழ்ச்சியில் 2ஆவது வட்டக் கழக செயலாளர் சண்முகம், துணைச் செயலாளர் தமிழ் நிதி, முன்னாள் மாவட்டஅவைத்தலைவர் பழனியப்பன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் நிதியரசு, கழக நிர்வாகிகள் ஆறுச்சாமி, வெற்றிச்செல்வன், மனோன்மணி ராஜகோபால், சி டி சி சுப்பிரமணியன், வாசு, பழனிச்சாமி, சின்ன சாமி, அயூப் கான், இம்ரான் கான், சுபாஷ், காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த, நாகராஜ் சிங்காரவேலன் மற்றும் கூட்டணி கட்சியைச் சார்ந்த தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...