திருப்பூர் அருகே சொத்துக்காக கொடுமைப்படுத்திய மகன் - காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த தாய்!

திருப்பூர் மன்னரை பகுதியை சேர்ந்த ராஜேஷ்வரி என்பவர், வீட்டை எழுதித் தருமாறு தன்னுடைய மகன் கார்த்தி அடித்து கொடுமைப்படுத்துவதாகக் கூறி, பாதுகாப்பு கேட்டு திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மன்னரைப் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்வரி. கணவர் இவரை விட்டு பிரிந்து 20 வருடங்களுக்கு முன்பே சென்றுவிட்டதால், மகன் கார்த்தியுடன் தங்கி கூலி வேலைகளை செய்து பிழைப்பு நடத்தி வந்தார்.

இதனிடையே, கடந்த இரண்டு மாதங்களாக மன்னரையில், ராஜேஸ்வரி தங்கி உள்ள வீட்டை அவரது மகன் கார்த்தி, தனது பெயருக்கு எழுதிக் கொடுக்கும்படி கூறி வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு ராஜேஸ்வரி உடன்படாததால் அவரது மகனும், உறவினர்கள் சிலரும் சேர்ந்து அவரைத் தாக்கியதாக கூறப்படுகிறது.



இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி, பாதுகாப்பு வழங்கக்கோரி திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார் .இது குறித்து வடக்கு காவல்நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்துக்காக தாயை உறவினர்களுடன் சேர்த்து மகன் கொடுமைப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...