கோவையில் கத்தியை காட்டி காவலாளியிடம் வழிப்பறி - இளைஞர் கைது

கோவை கணபதி பகுதியில் தனியார் நிறுவனத்தில் காவலாளியான பணிபுரிந்து வரும் சாமிநாதன் என்பவரை கத்தியை காட்டி மிரட்டி 500 பணத்தை பறித்துவிட்டு தப்பிச் சென்ற ஆதித்யன் என்பவரை சரவணம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை கணபதி பகுதியில் வசிப்பவர் சாமிநாதன் (வயது52). முதியவரான சாமிநாதன் கடந்த 13 வருடங்களாக அதே பகுதியில் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகின்றார். இந்த நிலையில் தனது பணியை முடித்துவிட்டு விநாயகர் கார்டன் பகுதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த ஒரு இளைஞர், அவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். முதியவர் தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்து இருக்கின்றார். ஆனால், அதனை பொருட்படுத்தாமல் தான் பதுக்கி வைத்திருந்த கத்தியை எடுத்த அந்த இளைஞர் முதியவரை மிரட்டி 500 ரூபாய் பணத்தை பறித்து விட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதுகுறித்து செக்யூரிட்டி சாமிநாதன் சரவணம்பட்டி போலீசில் புகார் தந்திருக்கின்றார். சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஆதித்யன் என்ற இளைஞர் இந்த வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, கத்தியை காட்டி செக்யூரிட்டியிடம் பணம் பறித்த அந்த நபரை, போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...