கோவை கோனியம்மன் கோயில் திருவிழா - பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!

கோவையில் நாளை நடைபெறவுள்ள கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில் 25,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பாதுகாப்பு பணிக்காக கோவிலை சுற்றி 1000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை கோனியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பாதுகாப்பு பணிக்காக கோவிலை சுற்றி 1000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கோவையில் அமைந்துள்ள பிரபலமான ஆன்மீக தளமாகும். கோனியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் தேர்த் திருவிழா பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதாகும்.

கோனியம்மன் கோவில் தேர் திருவிழா நாளை நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவில் கோயம்புத்தூர் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான ஆன்மீக பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள்.

கிட்டத்தட்ட 25 ஆயிரம் முதல் 30,000 மேற்பட்ட பக்தர்கள் ஒரே நாளில் ஒரே இடத்துக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பக்தர்களுக்கு பாதுகாப்பு தரும் பொருட்டு கோனியம்மன் கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனையொட்டி, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் நான்கு துணை ஆணையர்கள், 11 உதவி ஆணையர்கள், 25 காவல் ஆய்வாளர்கள் உட்பட 1060 போலீசார் கோனியம்மன் திருக்கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

அதுமட்டுமின்றி பக்தர்கள் கூட்டத்தில் கைவரிசை காட்டுவோரை பிடிப்பதற்காக போலீசார் மப்டியில் உலா வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோனியம்மன் கோயிலின் நுழைவு வாசலில் மெட்டல் டிடெக்டர்களும் வைக்கப்பட்டு இருக்கின்றன. அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் பொதுமக்கள் மற்றும் பக்தர்களை பாதுகாக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருக்கின்றனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...