தாராபுரம் அருகே ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.16.8 லட்சத்துக்கு மக்காச்சோளம் விற்பனை!

தாராபுரம் அடுத்த அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கொண்டு வந்த மக்காச்சோளம் ரூ.16.8 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.16.8 லட்சத்துக்கு மக்காச்சோளம் விற்பனை செய்யப்பட்டது.

தாராபுரத்தை அடுத்த அலங்கியம் பகுதியில் திருப்பூர் விற்பனை குழுவின், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மக்காச்சோளத்திற்கான மறைமுக ஏலம் நடைபெற்றது.

இதற்காக திருப்பூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு, 75,729 கிலோ அளவிலான மக்காச்சோளத்தை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த ஏலத்தில், திருப்பூர் திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது அதிகபட்சமாக குவிண்டால் ஒன்று ரூ.2,265க்கும் குறைந்தபட்சமாக ரூ.2,187 க்கும் விலை போனது. அதன் மூலம் மொத்தமாக ரூ. 16,82,077-க்கு மக்காச்சோளம் விற்பனை செய்யப்பட்டது.

ஏலத்திற்கான ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் அருள்குமார் செய்திருந்தார்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....