வேங்கை வயல் விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்..! - தாராபுரத்தில் தடா பெரியசாமி வலியுறுத்தல்

திமுக அரசு தங்களை திராவிட அரசு, சமூக நீதி அரசு என்று சொல்லிக் கொண்டு வருகிறது. பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்யாமல் 10,461 கோடி ரூபாயை திமுக அரசு ஏமாற்றி உள்ளதாக பாஜக பட்டியலின பிரிவு மாநில தலைவர் தடா பெரியசாமி குற்றச்சாட்டினார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பாரதிய ஜனதா கட்சியின் பட்டியலின பிரிவு சார்பாக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இதில், பட்டியலின அணியின் மாவட்ட தலைவர் சித்தார்த்தன் வரவேற்றார்.



பாஜக மாநில பட்டியலின பிரிவு தலைவர் தடா பெரியசாமி தலைமை வகித்தார்.

இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் தடா பெரியசாமி கூறியதாவது:



திமுக அரசனது பட்டியலின சமூகத்தை வஞ்சித்து வருகிறது. பட்டியல் சமூகத்திற்கு மத்திய அரசாங்கம் ஏராளமான நிதியை ஒதுக்கி வருகிறது. மாநில அரசுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் அனைத்தும் திமுக அரசு செலவு செய்யாமல் மனம்போன போக்கில் செலவு செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளது.

22 -23 நிதியாண்டில் மட்டும் 16,442 கோடி அதில் பத்தாயிரத்தி நானூத்தி அறுபத்தாறு கோடி செலவு செய்யாமல் இருக்கிறது. திமுக அரசு தங்களை திராவிட அரசு, சமூக நீதி அரசு என்று சொல்லிக் கொண்டு வருகிறது. பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்யாமல் 10,461 கோடி ஏமாற்றிக் கொண்டு இருக்கும் அரசு திமுக அரசு.

நேற்றைய தினம் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இந்த செய்தியை பத்திரிகையாளர்களிடம் முன் வைத்தார் அதற்கு இதுவரை திமுக அரசின் முதல்வரோ, தாராபுரத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜோ இதுவரை வாய் திறக்கவில்லை.

அந்த அளவிற்கு பட்டியல் சமூகத்தை ஏமாற்றி சமூக மக்களை வஞ்சிக்கும் அரசாக திமுக அரசு செயல் பட்டு வருகிறது. இதேபோன்று 2010 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி இருந்தபோது, பட்டியல் சமூகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியும் செலவு செய்யாமல் அதை எடுத்து தனியார் தொலைக்காட்சிக்கு கொடுத்து விட்டார்கள். அந்த அளவிற்கு ஏமாற்றி வருகின்றனர்.

இதை போன்று சமத்துவபுரம் என்று இந்த நிதியை எடுத்து செலவு செய்தார். தொடர்ந்து தமிழக மக்களை வஞ்சிக்கும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. பட்டியலின மக்களை ஏமாற்றுவதை நிறுத்தவில்லை என்றால் திமுக அரசை கண்டித்து எதிர்வரும் ஆறாம் தேதி தமிழக முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

வேங்கைவயல் விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டறியாமல் வேறொரு விஷயத்தை திசைமாற்றம் செய்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் உண்மை குற்றவாளிகளை கைது செய்யாமல் ஏமாற்றி விட்டீர்கள். மாவட்ட ஆட்சியரை கண்டித்து வந்ததாகவும் இதைத் தாண்டி காவல்துறையினர் சிபிசிஐடிக்கு அனுப்பினார்கள். நாங்கள் சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்டுள்ளோம்.

உண்மை குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இந்த வழக்கை சிபிஐ எடுத்து விசாரிக்க வேண்டும். குற்றவாளி யார் என்று காவல்துறைக்கும் தெரியும். உண்மை குற்றவாளிகளை மறைக்க பார்க்கிறார்கள். அதற்காகத்தான் சிபிஐ விசாரணை வேண்டுமென நாங்கள் கேட்கிறோம்.

Newsletter

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...