கோவை தடாகம் சாலை விரிவாக்க பணியை வேகப்படுத்துக..! - பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு

கோவை காந்திபார்க் முதல் கணுவாய் வரையிலான தடாகம் சாலை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி அடிக்கல் நாட்டி ஓராண்டு மேலாகியும் துவங்கப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருவதாக ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாநகர பகுதியான காந்தி பார்க் முதல் கணுவாய் வரையிலான தடாகம் சாலையை நான்கு வழி சாலை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு ஓர் ஆண்டு ஆகியுள்ளது.

இதற்கான பணிகள் இன்னும் துவங்கப்படாமல்இருப்பதாகவும், அதேபோல் அப்பகுதியில் குடிநீர் திட்டத்திற்கான குழாய் பதிக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துக்களும் நிகழ்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



இந்நிலையில், கோவை மாநகர சாலை பயனாளர்கள் சங்கத்தினர் சாலை ஓரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்க பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



மேலும், ஜீவா நகர், கே கே புதூர் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்க பணிகளை துரிதப்படுத்தி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.



முன்னதாக, முன்னாள் மாமன்ற உறுப்பினர் புருஷோத்தமன் முன்னிலையில் மனு அளிக்க வந்த அச்சங்கத்தினர், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...