கோவையில் அரசுப் பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து - போலீசார் விசாரணை

கோவை காந்திபுரம் சிக்னலில் மெதுவாகச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதி விபத்தில் ஒருவர் காயமடைந்தார். காலை நேரம் என்பதால் சாலையோரம் மக்கள் நடமாட்டம் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.


கோவை: கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலிந்து வடக்கு நோக்கி சிக்னல் அருகே அரசு விரைவுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அதன் பின்னால் தனியார் ஆம்னி பேருந்து சென்றது.



அப்போது சிக்னல் அருகே பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக பயணித்துக்கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக அரசு பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதனால் முன் சென்ற பேருந்து சாலையின் ஓரம் ஒதுங்கி கடை வாசலுக்கு சென்றது.



சாலையின் இடதுபுறம் இருந்த சிறு கடைகள் தடுப்புகள் தகர இரும்பு பெட்டிகள் உள்ளிட்டவற்றின் மீது மோதி கடை வாசலில் மோதி நின்றது. ஆம்னி பேருந்து அரசுப் பேருந்தின்மீது மோதியவுடன், அரசுப்பேருந்தின் ஓட்டுநர் உடனடியாக பிரேக் போட்டு கடை மீது பேருந்து மோதாமல் தடுத்துவிட்டார்.

காலை நேரம் என்பதால் சாலையோரம் மக்கள் நடமாட்டம் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், கடையில் இருந்த ஒரு நபர் மீது பேருந்து மோதியதில் அவர் லேசான காயம் அடைந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த மாநகர காவல்துறையினர், விபத்துக்கான காரணம் குறித்து பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 49 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்...

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...