கோவையில் அரசுப் பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து - போலீசார் விசாரணை

கோவை காந்திபுரம் சிக்னலில் மெதுவாகச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதி விபத்தில் ஒருவர் காயமடைந்தார். காலை நேரம் என்பதால் சாலையோரம் மக்கள் நடமாட்டம் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.


கோவை: கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலிந்து வடக்கு நோக்கி சிக்னல் அருகே அரசு விரைவுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அதன் பின்னால் தனியார் ஆம்னி பேருந்து சென்றது.



அப்போது சிக்னல் அருகே பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக பயணித்துக்கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக அரசு பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதனால் முன் சென்ற பேருந்து சாலையின் ஓரம் ஒதுங்கி கடை வாசலுக்கு சென்றது.



சாலையின் இடதுபுறம் இருந்த சிறு கடைகள் தடுப்புகள் தகர இரும்பு பெட்டிகள் உள்ளிட்டவற்றின் மீது மோதி கடை வாசலில் மோதி நின்றது. ஆம்னி பேருந்து அரசுப் பேருந்தின்மீது மோதியவுடன், அரசுப்பேருந்தின் ஓட்டுநர் உடனடியாக பிரேக் போட்டு கடை மீது பேருந்து மோதாமல் தடுத்துவிட்டார்.

காலை நேரம் என்பதால் சாலையோரம் மக்கள் நடமாட்டம் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், கடையில் இருந்த ஒரு நபர் மீது பேருந்து மோதியதில் அவர் லேசான காயம் அடைந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த மாநகர காவல்துறையினர், விபத்துக்கான காரணம் குறித்து பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...