திருப்பூரில் பாஜக மாநில துணைத் தலைவரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ரயில்வே போலீசாரை வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜை மிரட்டி, அதனை வீடியோ பதிவாக டிவிட்டரிலும் வெளியிட்ட நாராயணன் திருப்பதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு பாஜக மாநில துணைத் தலைவருக்கு எதிராக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



சென்னை - கோவை சென்ற சதாப்தி ரயிலில் கடந்த 22ஆம் தேதி பாஜகவின் மாநில துணைத்தலைவரும், செய்தி தொடர்பாளருமான நாராயணன் திருப்பதி சேலம் நோக்கி வந்துகொண்டிருந்தார். அதே ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த சக பயணி ஒருவர் செய்தித்தாள்களில் வந்த செய்தியை ஆதாரமாகக் கொண்டு பிரதமர் மோடியை விமர்சித்து வந்ததால் நாராயணன் திருப்பதி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பின் பொதுச் செயலாளருமான சாமுவேல்ராஜ், நாராயணன் திருப்பதி செயலை கண்டித்தபோது பாஜகவின் மாநில துணைத்தலைவர் மற்றும் ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் என அதிகாரத்தை பயன்படுத்தி ரயில்வே போலீசாரை வைத்து சாமுவேல்ராஜை மிரட்டியுள்ளார்.



அதனை வீடியோ பதிவாக டிவிட்டரிலும் வெளியிட்ட செயலுக்குக் கண்டனம் தெரிவித்தும் நாராயணன் திருப்பதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய அமைப்பின் நிர்வாகிகள் ஏராளமானார் கலந்து கொண்டனர்.

Newsletter

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கோரி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம், ஓய்வு வயது உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ...

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...