கிணத்துக்கடவு சமுதாயக் கூடத்தில் சமுதாய வளைகாப்பு - எம்எல்ஏ தாமோதரன் பங்கேற்பு

கிணத்துக்கடவு சமுதாயக் கூடத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்குச் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது. இதில் கர்ப்பிணி பெண்களுக்கு புடவை வழங்கி, வளையல் அணிவிக்கப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு சமுதாயக் கூடத்தில், கர்ப்பிணிப் பெண்களுக்குச் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது.



கோவை கிணத்துக்கடவு சமுதாயக் கூடத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்குச் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது.

இதில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கிணத்துக்கடவு வட்டார திட்ட அலுவலர் சகுந்தலா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். முன்னதாக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

பின்னர் கர்ப்பிணிப் பெண்களுக்குப் புடவை வழங்கி, வளையல்கள் அணிவித்து ஐந்து வகையான அறுசுவை சாப்பாடுகள் வழங்கப்பட்டன. தாய் வீட்டில் நடப்பது போல் நடந்த இந்த வளைகாப்பு நிகழ்ச்சியைக் கண்டு கர்ப்பிணி பெண்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜன், கிணத்துக்கடவு ஒன்றிய குழு உறுப்பினர் ராமசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் பிரபு, சுரேஷ் மற்றும் கிணத்துக்கடவு வட்டார மருத்துவ அலுவலர் சித்ரா, பேரூராட்சி கவுன்சிலர்கள் சக்தி சரண்யா, மஞ்சுளா மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர்கள் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...