'உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள்..!' - கோவை ஏர்போர்ட்டில் மாணவர்கள் நாடகம்!

கங்கா மருத்துவமனை செவிலியர் கல்லூரி மாணவர்கள், கோவை விமான நிலைய வளாகத்தில் உடல் உறுப்பு தானம் மற்றும் தோல் உறுப்பு தானம் குறித்த நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



கோவை: கோவை விமான நிலையத்தில் தனியார் செவிலியர் கல்லூரி மாணவர்கள் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



கோவை வட்டமலை பாளையம் பகுதியில் உள்ள கங்கா மருத்துவமனை செவிலியர் கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்கள் 25-க்கும் மேற்பட்டோர், கோவை விமான நிலைய வளாகத்தில் உடல் உறுப்பு தானம் மற்றும் தோல் உறுப்பு தானம் குறித்த நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



இந்த நாடகம் விமான நிலைய பயணிகளிடம் வரவேற்பைப் பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் கூறுகையில், கோவை மாநகரம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் முகபாவனை நாடகம் நடத்தி வருகிறோம். பொதுமக்கள் இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணிய வேண்டும், தோல் உறுப்பு தானம் செய்ய வேண்டும், கார் ஓட்டும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும். மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்தனற்.



நிகழ்ச்சியின் முடிவில் கோவை விமான நிலைய இயக்குநர் செந்தில்வளவன், கல்லூரி மாணவர்களை பாராட்டினார்.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...