'உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள்..!' - கோவை ஏர்போர்ட்டில் மாணவர்கள் நாடகம்!

கங்கா மருத்துவமனை செவிலியர் கல்லூரி மாணவர்கள், கோவை விமான நிலைய வளாகத்தில் உடல் உறுப்பு தானம் மற்றும் தோல் உறுப்பு தானம் குறித்த நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



கோவை: கோவை விமான நிலையத்தில் தனியார் செவிலியர் கல்லூரி மாணவர்கள் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



கோவை வட்டமலை பாளையம் பகுதியில் உள்ள கங்கா மருத்துவமனை செவிலியர் கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்கள் 25-க்கும் மேற்பட்டோர், கோவை விமான நிலைய வளாகத்தில் உடல் உறுப்பு தானம் மற்றும் தோல் உறுப்பு தானம் குறித்த நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



இந்த நாடகம் விமான நிலைய பயணிகளிடம் வரவேற்பைப் பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் கூறுகையில், கோவை மாநகரம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் முகபாவனை நாடகம் நடத்தி வருகிறோம். பொதுமக்கள் இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணிய வேண்டும், தோல் உறுப்பு தானம் செய்ய வேண்டும், கார் ஓட்டும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும். மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்தனற்.



நிகழ்ச்சியின் முடிவில் கோவை விமான நிலைய இயக்குநர் செந்தில்வளவன், கல்லூரி மாணவர்களை பாராட்டினார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...