கோவை அருகே நடந்த சாலை விபத்துகளில் பெண் உட்பட 2 பேர் பலியான சோகம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனத்தின் மீது லோடு வேன் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். சூலூரில் இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சூலூர் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் பெண் உட்பட இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள மரப்பேட்டையை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி மகேஸ்வரி (45). கணவன் - மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் உடுமலை - பொள்ளாச்சி சாலையில் சென்றுள்ளனர்.

அப்போது, அந்த வழியாக சென்ற லோடு வேன் ஒன்று இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பின்னால் அமர்ந்திருந்த மகேஸ்வரி தலையில் பலத்த காயம் அடைந்தார். இந்நிலையில் அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல், சூலூர் அடுத்த சித்தநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (35). கூலி தொழிலாளியான இவர், தனது இருசக்கர வாகனத்தில், பாப்பம்பட்டி - செட்டிப்பாளையம் சாலையில் சென்றுள்ளார்.

அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சுப்பிரமணியம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...