கோத்தகிரி அருகே நள்ளிரவில் உலா வரும் சிறுத்தை - குடியிருப்புவாசிகள் அச்சம்

கோத்தகிரியிலிருந்து அரவேனு கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள பெரியார் நகர் பகுதியில் நேற்றிரவு சிறுத்தை ஒன்று உலா வந்துள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



நீலகிரி: கோத்தகிரி பகுதியில் நள்ளிரவில் உலா வந்த சிறுத்தையால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்து கொண்டே வருகிறது.



பகல் நேரங்களில் வனப் பகுதிக்குள் செல்லும் சிறுத்தைகள் இரவு நேரங்களில் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகளிலே சுற்றித் தெரிந்து வருவதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் கோத்தகிரியிலிருந்து அரவேனு கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள பெரியார் நகர் பகுதியில் நேற்றிரவு மீண்டும் ஒரு சிறுத்தை வந்துள்ளது.



இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் சர்வ சாதாரணமாக நடந்து செல்லும், சிறுத்தை குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே அந்த சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்குமாறு வனத்துறையினருக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...