புதிய மின் இணைப்பு பெற உரிமைச்சான்று கேட்கும் மின்சார வாரியம் - தவிக்கும் உடுமலை மக்கள்!

உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் புதிய மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கும் பொதுமக்களிடம் மின்வாரிய அதிகாரிகள் உரிமைச்சான்று கேட்கும் நிலையில், வருவாய் துறையினர் உரிமை சான்று கொடுக்க மறுப்பதால் செய்வதறியாது பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.


திருப்பூர்: உடுமலை பகுதியில் புதிய மின் இணைப்பு பெற மின்வாரிய அதிகாரிகள் உரிமைச்சான்று கேட்பதால் பொதுமக்கள் செய்வது அறியாது தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது, பல இன்னல்களுக்குப் பிறகு புதிய வீடு கட்டி அதற்கு, மின் இணைப்பு பெறுவதற்காக மின் வாரியத்தை அணுகும்போது ஆதார் நகல், வீட்டு பத்திரம், வீட்டு வரி ரசீது உள்ளிட்டவைகளோடு, இடத்துக்கு சொந்தக்காரர் அவர் தான் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக உரிமைச்சான்று வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

இதை வாங்க, வருவாய்த்துறை அதிகாரிகளை அணுகினால், உரிமைச்சான்று வழங்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாக கூறுகின்றனர். இதனால் பலரும் தவிக்கும் நிலை உரு வாகியுள்ளது.

இந்நிலையில் மின்வாரிய அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட தொகையை கொடுத்தால் உரிமைச்சான்று இல்லாமலேயே மின் இணைப்பு பெற்று தருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகள் கடன் பெறுவதற்கு உரிமைச்சான்று தேவையில்லை என்று அறிவித்தது போல மின் வாரியத்திலும் அறிவிக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.

புதிய மின் இணைப்பு பெறுவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் போது தேவையான ஆவணங்கள் பட்டியலில் உரிமைச் சான்று குறிப்பிடப்படவில்லை. இதுகுறித்த விவரம் தெரிந்தவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து மின் இணைப்பு பெறுகின்றனர்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...