கோவையில் வரும் 26 ஆம் தேதி அறிவொளி இயக்க குடும்ப விழா - அறிவொளி சுடர்கள் நூல் வெளியீடு!

கோவை சித்தாபுதூர் அரசு பள்ளியில் அறிவொளி இயக்க குடும்ப விழா வரும் 26-ம் தேதி நடக்கிறது. 1990 முதல் 97 வரை அறிவொளி இயக்கத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவங்களை தொகுத்து எழுதப்பட்ட அறிவொளி சுடர்கள் எனும் நூல் வெளியிடப்பட உள்ளது.


கோவை: கோவையில் வரும் 26ஆம் தேதி அறிவொளி இயக்க குடும்ப விழா நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையை சேர்ந்த அறிவொளி என்ற இயக்கம் கடந்த பல ஆண்டுகளாக கல்வி சேவையை புரிந்து வருகிறது. இந்த நிலையில் சுமார் முப்பது வருடங்களுக்கு பிறகு அறிவொளி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களின் குடும்ப விழா கோவை சித்தாபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு கோவை பத்திரிக்கையாளர்கள் மன்ற அரங்கில் நடைபெற்றது. இதில் அறிவொளி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் சுப்ரமணியன், மோகன் தாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய அவர்கள் வருகின்ற 26ஆம் தேதி சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அறிவொளி இயக்க குடும்ப விழா நடைபெற உள்ளது. இதில் கடந்த 1990 முதல் 97 வரை அறிவொளி இயக்கத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவங்களை தொகுத்து புத்தகமாக அறிவொளி சுடர்கள் எனும் நூலை வெளியிடப்பட உள்ளது.

இந்த நூலை ஓய்வு பெற்ற கூடுதல் தலைமைச் செயலாளரும் முன்னாள் கோவை மாவட்ட ஆட்சியருமான சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெளியிட உள்ளார். மேலும் விழாவில், தற்போதைய கோவை மாவட்ட ஆட்சித் தலைவர், மேயர் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது, கிருஷ்ணமூர்த்தி, அப்பாஸ் நாராயணசாமி, பால சண்முகம், உமாவதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...