கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது வழக்கு- இரவிலும் தொடரும் போராட்டம்!

கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறக்கோரியும், உரிய காரணம் இன்றி மாணவர்களை இடைநீக்கம் செய்த கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும் சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடங்கிய போராட்டம் இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


கோவை:மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்கை கண்டித்து கோவை சட்டக் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் தொடங்கிய போராட்டம் இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கோவை மருதமலை அடிவாரத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் பயிலும் ஷேக் முகமது என்ற மாணவர் அவரது மனைவியான ஹாரிதா (இருவரும் கல்லூரி மாணவர்கள்) ஆகியோரின் டிசி தொடர்பாக கல்லூரி அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் மிரட்டியதாக கல்லூரி நிர்வாகம் சார்பில் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருவரையும் கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.

அதே சமயம் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் தரணீஸ் என்ற மாணவரையும் உரிய காரணம் இன்றி இடைநீக்கம் செய்ததாக மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் உரிய விளக்கம் அளிக்காமல் மாணவர்களை இடைநீக்கம் செய்த கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கல்லூரி வளாகம் முன்பு மாணவர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

போராட்டத்தின் போது கல்லூரி முதல்வர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் போராட்டம் இரவு நேரத்திலும் தொடர்ந்து வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் உரிய காரணங்கள் இன்றி இடைநீக்கம் செய்த மாணவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் எனவும் இந்த போராட்டத்தை காரணம் காட்டி மாணவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

அதேசமயம் மாணவர்கள் மீதான புகாரை விசாரிக்கும் விசாரணைக் குழுவில் மாணவர்கள் இடம்பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...