வால்பாறை - அதிரப்பள்ளி சாலையில் வலம் வரும் காட்டு யானை - வாகன ஓட்டிகள் அச்சம்!

வால்பாறை அதிரப்பள்ளி சாலையில் விரிவாக்க பணியின் போது திடீரென வந்த ஒற்றை காட்டு யானையை கண்ட ஊழியர்கள் அச்சமடைந்து, அலறியடித்து ஓடி பாறைகள் மீது ஏறி பாதுகாப்பாக நின்றுள்ளனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே மழுக்கபாறை - அதிரப்பள்ளி சாலையில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர்.

வால்பாறை அருகேயுள்ள அதிரப்பள்ளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றைக் காட்டு யானை வாகனங்களை மறித்தும் சாலையில் நடந்தும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் கீழ் சோலையார் அணை பகுதியில் சாலை விரிவாக்க பணிகளை ஊழியர்கள் மேற்கொண்டிருந்தனர்.



அப்பொழுது சாலையில் தீடீரென வந்த ஒற்றை காட்டு யானையை கண்ட ஊழியர்கள் அச்சத்தில் அருகில் இருந்த பாறைகள் மேல் ஏறி பாதுகாப்பாக நின்றனர். பின்னர் யானை பாலத்தை கடந்து சென்றது.

இந்நிலையில் தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளி செல்லும் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.

பெரிய கனரக வாகனங்களின் பின் இருசக்கர வாகனங்கள் மற்றும் சிறிய வாகனங்கள் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...