உடுமலை அருகே அரசு பேருந்து மீது ஆம்னி வேன் மோதி விபத்து - 6 பேர் படுகாயம்!

உடுமலை அருகே வேடசந்தூரிலிருந்து கோவை நோக்கி சென்ற ஆம்னி வேன், அரசு பேருந்து மீது மோதிய விபத்தில், ஆம்னி வேனில் பயணம் செய்த ஆறு பேர் படுகாயமடைந்து, உடுமலை மற்றும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி.



திருப்பூர்: உடுமலை அருகே அரசு பேருந்து மீது, ஆம்னி வேன் மோதிய விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியாரில் சிற்றுண்டி உணவகம் நடத்தி வருபவர் சீனிவாசன். இவர் தனது ஆம்னி வேனில் குடும்பத்துடன், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் பொள்ளாச்சிக்கு திரும்பி கொண்டிருந்தார்.



இந்நிலையில் ஆம்னி வேன் பாலப்பம்பட்டி அருகே வந்த போது, எதிரில் கோவையிலிருந்து பழனி சென்ற அரசு பேருந்து மீது மோதியது.



இந்த விபத்தில் ஆம்னி வேனில் பயணம் செய்த சதீஷ்(25), ராஜேஸ்வரி(50), சிங்காரம்(60), வேணுகோபால்(80), பூவாத்தா(16) மற்றும் சீனிவாசன்(52) ஆகிய ஆறு பேர் படுகாயம் அடைந்தனர்.



இந்த நிலையில் அருகிலிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கும், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனக்ர்.

இதனிடையே விபத்து தொடர்பாக உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...