கோவையில் கடனை திருப்பி கொடுக்காத நண்பரை கொலை செய்த ஒட்டுநர் போலீசில் சரண்!

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் சாரங்கபாணி என்பவர் தனது நண்பரான சுப்ரமணிக்கு கடன் கொடுத்த நிலையில் அதனை திருப்பி கேட்டபோது தரமறுத்த சுப்ரமணியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு சாரங்கபாணி காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.


கோவை: ஆவாரம்பாளையத்தில் கொடுத்த கடனை திருப்பி தராததால், ஆத்திரத்தில் நண்பனையே அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஆவாரம்பாளையம் அடுத்த சோபா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி(28). ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது நண்பர் சாரங்கபாணியும் (31), அதேப் பகுதியில் சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார்.

இந்நிலையில் சுப்பிரமணிக்கு கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு ஆட்டோ வாங்குவதற்காக ரூ.20 ஆயிரம் பணத்தை சாரங்கபாணி கடனாக கொடுத்துள்ளார். வாங்கிய கடனை திருப்பி கேட்கும் போது எல்லாம், இன்று, நாளை என காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது.

இதனால் கோபத்திலிருந்த சாரங்கபாணி, இன்று மாலை மது அருந்திக் கொண்டிருந்த சுப்பிரமணியிடம் தனக்கு தரவேண்டிய ரூ.20 ஆயிரம் பணத்தை கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியுள்ளது.

இதில் கோபமடைந்த சாரங்கபாணி தனது வாகனத்திலிருந்த இரும்பு கம்பியை எடுத்து சுப்பிரமணியின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் பின்தலையில் பலத்த காயம் அடைந்த சுப்பிரமணி, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து நண்பரையே இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சாரங்கபாணி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...