கோவை வெள்ளலூரில் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

வெள்ளலூர் பகுதியை சேர்ந்த மோகன் குமார் என்ற இளைஞர் படித்துவிட்டு வேலையில்லாமல் தவித்து வந்த நிலையில், ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி, மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.



கோவை: கோவை மாவட்டம் வெள்ளலூர் அருகே ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான பட்டதாரி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் மோகன் குமார் (25). இவர் பி.எஸ்.சி ஐ.டி படித்துவிட்டு சரியான வேலை இல்லாததால் வீட்டில் இருந்து வந்துள்ளார். வேலையில்லாத சூழலில் மோகன் குமார் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இறங்கி அடிமையாகியுள்ளார்.

தொடர்ந்து செல்போனை பார்த்து விளையாடி வந்ததால் இளைஞர் மோகன் குமாருக்கு நீண்ட நாட்களாக தலைவலி மற்றும் பார்வை குறைபாடு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் மிகுந்த மன உளைச்சலில் இருந்த வந்த அவர், நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் சந்தேக மரண வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகி ஏற்கனவே பலர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், கோவையில் மேலும் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...