பல்லடம் கோளறுபதி நவகிரக கோட்டையில் மகாசிவராத்திரி விழா - 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு

பல்லடம் அருகேயுள்ள சித்தம்பலம் கோளறுபதி நவகிரக கோட்டையில் வெகு விமரிசையாக நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் 3,000-கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோளறுபதி நவகிரக கோட்டையில் மகாசிவராத்திரி விழாவில் 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



பல்லடம் அடுத்த சித்தம்பலம் கிராமத்தில் அமைந்துள்ள கோளறுபடி நவகிரக கோட்டையில் மகா சிவராத்திரி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.



மாலை 6 மணிக்கு கோ பூஜை, முதற்கால வேள்வி, மகா அபிஷேகம், மகா தீபாராதனை சிவன் - பார்வதி திருக்கல்யாண நிகழ்வுடன் தொடங்கியது.



இந்நிலையில், ஐந்து கால வேள்வி பஜனை, ஞான குருவின் சத்சங்கம் சிவ நாம கூட்டுப் பிரார்த்தனை இன்னிசை நிகழ்ச்சிகள் மற்றும் முழு இரவு பிராத்தனைகளோடு காலை 6 மணி வரை சிவராத்திரி பெருவிழா நடைபெற்றது.



இந்த நிகழ்வில் குழந்தைகள் சிவபெருமான் பார்வதி வேடம் அணிந்து பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியும் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

அதிகாலை 6:00 மணி அளவில் ஐந்தாம் கால வேள்வி சிவபெருமான் மகாபலி அம்மையப்பர் திருவீதி உலா ரோடு சிவராத்திரி திருவிழா நிறைவடைந்தது.



இந்த மகா சிவராத்திரி திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 3000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...