கோவை வேளாண் பல்கலை மாணவர்களுடன் கலந்துரையாடிய டிஜிபி சைலேந்திரபாபு!

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு கலந்து கொண்டு, மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, அவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்.



கோவை: கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்று மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.



கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தின் அறிஞர் அண்ணா நிர்வாக வளாகத்தில் மாணவர் நல மையம் சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு வேளாண் பல்கலைக்கழக மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில் மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு விஷயங்களையும், ஊக்கமூட்டும் கருத்துக்களையும் டிஜிபி சைலேந்திரபாபு பகிர்ந்து கொண்டார்.



மேலும் இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் அவர்களது கல்வி மற்றும் வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு கேள்விகளை முன் வைத்தனர். அவை அனைத்திற்கும் சைலேந்திரபாபு பதிலளித்தார். கலந்துரையாடல் நிகழ்ச்சி முடிந்து செல்லும்போது மாணவர்கள் அவருடன் புகைபடங்கள் எடுத்து கொண்டனர்.

அப்போது பாதுகாவலர்கள் மாணவர்களை தடுத்த போதிலும் மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளித்த டிஜிபி சைலேந்திரபாபு, அனைவருடனும் புகைப்படம் எடுத்து கொண்ட பின்னரே புறப்பட்டார்.

இந்த கலந்துரையாடல் நிகழ்வில் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலெட்சுமி மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...