மேட்டுப்பாளையத்தில் சிறுதானிய உணவுக் கண்காட்சி - ஆர்வத்துடன் பார்வையிட்ட மாணவ-மாணவியர்

மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் நடந்த சிறுதானிய உணவு கண்காட்சியில் சாமை, தினை, கேழ்வரகு, கம்பு, மற்றும் தானிய பயிர் வகைகள் குறித்து பல்வேறு உணவுப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடையில் ஆர்.வி கலை அறிவியல் கல்லூரி சார்பில் சிறுதானிய உணவுகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறுதானிய உணவுகள் பொருட்கள் கண்காட்சி நடத்தப்பட்டது.



இந்த கண்காட்சியில், நாகரீக வாழ்க்கையில் நாம் மறந்து போன நமது பழமையான உணவு பழக்க வழக்க முறைகளாக இருந்துவந்த சாமை, தினை, கேழ்வரகு, கம்பு, மற்றும் தானிய பயிர் வகைகள் குறித்து பல்வேறு உணவுப்பொருட்கள் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருத்தது.



கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த கண்காட்சியில், சுமார் 25 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் 30க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய உணவுகள் மற்றும் நமது பாரம்பரிய நாட்டு மருந்து என்ற அடிப்படையில் உள்ள பிரண்டை, ஆவாரம்பூ, தூதுவேளை, நெல்லிக்கனி உள்ளிட்ட மருத்துவ குணம் கொண்ட பொருட்களும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.



இந்த கண்காட்சியினை பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பார்வையிட்டனர். முன்னதாக, இந்த கண்காட்சியினை ஆச்சி மசாலா கல்வி குழும நிர்வாக அதிகாரி ஸ்டான்லி துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ரூபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...