உடுமலையில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலைமறியல் - 62 பேர் கைது

உடுமலை மின்வாரிய மேற்பார்வைப்பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். ஒப்பந்தப்படி தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும், ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


திருப்பூர்: உடுமலையில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு உடுமலை மின் வட்டக்கிளை சார்பில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் உடுமலை-திருப்பூர் சாலையில் உள்ள மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன்பு அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு துணைத்தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். கோபாலகிருஷ்ணன், ஜெகதீசன் ஆகியோர் மறியல் போராட்டத்தின் அவசியம் குறித்துப் பேசினர்.

இதில், மின் வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஒப்பந்தப்படி தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும், காலியாக உள்ள களப்பணியிடங்களில் ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், சம வேலைக்குச் சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

இந்த மறியல் போராட்டத்தால் உடுமலை-திருப்பூர் சாலையில் போக்குவரத்து பாதித்தது. இதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 62 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...