பல்லடம் அருகே இரவில் கிராம நிர்வாக அலுவலரை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் - பரபரப்பு

பல்லடம் அருகே புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளை காலி செய்யக்கோரி இரவில் நோட்டீஸ் வழங்க வந்த கிராம நிர்வாக அலுவலரை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.



திருப்பூர்: துத்தேரிப்பாளையம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலரை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் கள்ளிப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட துத்தேரிப்பாளையம் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 150 ஆண்டுகளாக வசித்து வருகின்றன. இங்கு கட்டப்பட்டுள்ள 63 வீடுகள் நீர்நிலை புறம்போக்கில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் வருவாய் துறை சார்பில் துத்தேரிப்பாளையம் கிராமத்தில் நீர்நிலை புறம்போக்கில் அமைந்துள்ள வீடுகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

ஆனால் கிராம மக்கள் மற்றும் வருவாய்த்துறை இடையே நடந்த பேச்சுவார்த்தையில் மூன்று மாத காலம் அவகாசம் அளிக்குமாறும் மாற்று இடம் வழங்குமாறு கிராம மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். மூன்று மாதங்கள் கழித்து கிராம மக்களுக்கு வழங்கிய கால அவகாசம் முடிந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் விஸ்வநாதன் மீண்டும் வீடுகளை காலி செய்யக்கோரி அறிவிப்பானை வழங்குவதற்காக இன்று இரவு நேரத்தில் வந்திருக்கிறார்.

வீட்டை காலி செய்ய முடியாது, அறிவிப்பாணையை வாங்க மறுத்ததால் வீட்டு சுவற்றில் ஒட்ட முயன்றுள்ளார்.



அப்போது ஆத்திரமடைந்த கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலரையும் அவரது காரையும் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



மேலும் கிராமத்தின் நுழைவு வாயிலில் சாலை முழுவதும் கற்களை அடுக்கி வாகனம் வெளியே செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் வட்டாட்சியர் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.



நீதிமன்ற உத்தரவுப்படி, நீர்நிலை புறம்போக்கில் குடியிருக்க அனுமதிக்க முடியாது எனவும், அறிவிப்பாணை வழங்க வந்த வருவாய்த்துறை அதிகாரிகளை சிறைபிடிப்பது தவறு எனவும், நாளை பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தையில் முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைக்குப் பிறகு கிராம நிர்வாக அலுவலரின் வாகனம் விடுவிக்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...