பல்லடம் அருகே கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலியான சோகம் - போலீசார் விசாரணை

பல்லடம் - மங்கலம் சாலையில் கட்டுமான பணியின்போது டிரில்லிங் இயந்திரத்தின் ஒயர் அறுந்ததில் மின்சாரம் தாக்கி முத்துக்குமார் என்ற கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கியதில் கட்டிடத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடம் அருகேயுள்ள ஆலூத்துபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி முத்துக்குமார். இவருக்கு மைதிலி என்ற மனைவியும், மவுலிஷ் என்ற மகனும் உள்ளனர்.



இந்நிலையில், கூலி தொழிலாளியான முத்துக்குமார், பல்லடம் - மங்கலம் சாலையில் பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனிடையே இன்று பிற்பகல் ஊட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சசிகுமார் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் கட்டிடத்திற்கு அஸ்திவாரம் போடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது குழி எடுக்கும் பணியின் போது ட்ரில்லிங் மெஷினை பயன்படுத்தி உள்ளனர்.



எதிர்பாராத விதமாக டிரில்லிங் மிஷின் மின்சார கம்பி அறுந்ததால் முத்துக்குமார் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.



அவருடன் பணிபுரிந்த மற்றொரு ஊழியர் மின் இணைப்பை துண்டிக்க முயற்சித்தும், முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மின் இணைப்பை துண்டிக்க சென்றதால் முத்துக்குமாருடன் பணியாற்றிய சசிகுமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.



இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் முத்துக்குமாரின் உடலை மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பல்லடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...