தன்னை பார்த்து குறைத்த நாயை அரிவாளால் வெட்டிய நபர் ஜாமீனில் விடுவிப்பு

கோவை நல்லாம்பாளையம் பகுதியில் தெருவில் நடந்து சென்றபோது நாய் குறைத்ததால், செந்தில்குமார் என்பவர் விரட்டி, விரட்டி அரிவாளால் வெட்டியுள்ளார்.


கோவை: தன்னை பார்த்துக் குறைத்த நாயை வெட்டியவரை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுதலை செய்தனர்.

கோவை சாய்பாபா கோவில் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் நல்லாம்பாளையம் புதுத்தோட்டம், மூன்றாவது தெரு வழியாகச் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கிருந்த நாய் ஒன்று இவரைப் பார்த்துக் குறைத்துள்ளது.

இதில் எரிச்சல் அடைந்த செந்தில்குமார் தான் வைத்திருந்த அரிவாளால் அந்த நாயை, வெட்டி காயப்படுத்தியுள்ளார். இதில் நாயின் கால், தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதைப் பார்த்த அங்கிருந்த கணுவாய் பகுதியைச் சேர்ந்த பிரியா என்பவர், துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பிரியாவின் புகாரைத் தொடர்ந்து செந்தில்குமார் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர். அவரை கைது செய்து காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.

Newsletter

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் ஆய்வு; நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சரத்குமார்

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆய்வு மேற்கொண்டு, முன்னாள் ப...

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...