திருப்பூர் மாவட்ட பாஜக ஊடக பிரிவு தலைவர் மறைவு - நேரில் வந்து அஞ்சலி செலுத்திய அண்ணாமலை!

திருப்பூர் மாவட்ட பாஜக ஊடகப்பிரிவு தலைவராக இருந்த நரேன் பாபு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை அவரது வீட்டிற்கு நேரடியாக சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.


திருப்பூர்: சமீபத்தில் மறைந்த திருப்பூர் மாவட்ட பாஜக ஊடகப் பிரிவு தலைவரின் வீட்டுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை நேரடியாக சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் பாஜக கட்சியின் ஊடக பிரிவு தலைவராக செயல்பட்டு வந்த நரேன் பாபு, கடந்த சில நாட்களுக்கு முன்பாக உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் கே.செட்டிபாளையம் பகுதியில் உள்ள நரேன் பாபுவின் வீட்டிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.



மேலும், அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஊடக பிரிவு தலைவர் நரேன் பாபு புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.



இதனையடுத்து, கோவையில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்விற்கு கலந்து கொள்ள சென்றார். இதில், கட்சியின் மாவட்ட தலைவர் செந்தில்வேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...