கோவை சூலூரில் சோளத்தட்டு ஏற்றிச்சென்ற லாரியில் திடீர் தீ விபத்து - பரபரப்பு

சூலூர் அருகே சோளத்தட்டு ஏற்றிச்சென்ற லாரி மின்கம்பியில் உரசியதில் ஏற்பட்ட தீவிபத்தில் லாரியின் பின்பக்கம் முழுவதும் தீக்கிரையான நிலையில் தீயணைப்பு துறையினர் ஜேசிபி உதவியுடன் சோளத்தட்டுகளை கீழே தள்ளி தீயை அணைத்தனர்.



கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே சோளத்தட்டு ஏற்றிச் சென்ற லாரி மின்கம்பியில் உரசியதில் ஏற்பட்ட விபத்தில், ஒரு லட்சம் மதிப்பிலான சோளத்தட்டுகள் தீக்கிரையாகின.

சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் முருகசாமிக்கு சொந்தமான தோட்டத்திலிருந்து பாலமுருகேசன் என்பவர் சோளத்தட்டுகளை லாரியில் ஏற்றிக் கொண்டு திருப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார்.



அப்போது தோட்டக் கலைத்துறை அலுவலகம் முன்பாக வந்த போது அங்கிருந்த தாழ்வான மின்கம்பியில் சோளத்தட்டுகள் உரசியதில், சோளத்தட்டுகளில் தீப்பற்றியது.



லாரியின் பின் பகுதியில் தீ மளமளவென பரவிய நிலையில், இதனை கண்டு அதிர்ச்சியடைந்த லாரியை ஒட்டி வந்த பாலமுருகேசன் உடனடியாக லாரியை நிறுத்தியுள்ளார். இதனையடுத்து லாரியில் இருந்து கீழே இறங்கிவிட்டு, சூலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.



தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் லாரியில் இருந்த சோளத்தட்டுகளை ஜேசிபி மூலம் கீழே தள்ளி பின்னர் தண்ணீரை பீச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



இந்த தீ விபத்தில் லாரி பின்பக்கம் முழுவதும் தீக்கிரையான நிலையில், ஒரு லட்சம் மதிப்பிலான சோள தட்டுகள் எரிந்து சாம்பலாகின. இச்சம்பவம் தொடர்பாக சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...