காதலர் தினத்தில் சாதி, மதத்தை கடந்து காதல் திருமணம் - கோவை பெரியார் படிப்பகத்தில் புது தம்பதிக்கு வாழ்த்து!

கோவை பெரியார் படிப்பகத்தில் காதலர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடிய நிலையில், இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த காதல் ஜோடி பெரியார் வழியில் திருமணம் செய்து கொண்டனர்.



கோவை: கோவையில் உள்ள பெரியார் படிப்பகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் காதலர் தினத்தை கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர்.

உலகம் முழுவதும் இன்று (பிப்ரவரி-14) காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் காதலர் தினம் கொண்டாடப்பட்டது.



இதில் இந்திய மாணவர் சங்கத்தினர் கேக் வெட்டி காதலர் தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்.



அப்போது, ஜாதி மதங்களை கடந்து வரும் காதலை போற்றிடுவோம் எனவும் ஜாதி மதங்களை தகர்த்திடுவோம் எனவும் முழக்கங்களை எழுப்பி இதய வடிவிலான பலூன்களை பறக்க விட்டனர்.



மேலும் காதலர் தினமான இன்று கோவை பெரியார் படிப்பகத்தில் இந்து மதத்தை சேர்ந்த கௌதம் மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ரீனா ஜெனிட்டா ஆகியோர் காதல் கலப்பு திருமணம் செய்து கொண்டனர்.



இதுகுறித்து பேசிய அந்த தம்பதி, மத ரீதியாக பல்வேறு இடர்பாடுகள் தங்களுக்கு வந்ததாகவும், அதனைத் தாண்டி தங்களுக்குள் இருந்த புரிதலால் திருமணம் செய்து கொண்டுள்ளோம்.

தற்போதைய காலத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் காதலை ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், ஒரு சில இடங்களில் ஜாதி, மதங்களை புரியாமல் சிலர் பின்பற்றி வருகின்றனர்.



அதனை தகர்க்கும் விதமாகவே நாங்கள் எவ்வித ஜாதி மதங்களையும் சாராமல் பெரியார் வழியில் திருமணம் செய்து கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...