காதலர் தினத்தில் சாதி, மதத்தை கடந்து காதல் திருமணம் - கோவை பெரியார் படிப்பகத்தில் புது தம்பதிக்கு வாழ்த்து!

கோவை பெரியார் படிப்பகத்தில் காதலர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடிய நிலையில், இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த காதல் ஜோடி பெரியார் வழியில் திருமணம் செய்து கொண்டனர்.



கோவை: கோவையில் உள்ள பெரியார் படிப்பகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் காதலர் தினத்தை கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர்.

உலகம் முழுவதும் இன்று (பிப்ரவரி-14) காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் காதலர் தினம் கொண்டாடப்பட்டது.



இதில் இந்திய மாணவர் சங்கத்தினர் கேக் வெட்டி காதலர் தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்.



அப்போது, ஜாதி மதங்களை கடந்து வரும் காதலை போற்றிடுவோம் எனவும் ஜாதி மதங்களை தகர்த்திடுவோம் எனவும் முழக்கங்களை எழுப்பி இதய வடிவிலான பலூன்களை பறக்க விட்டனர்.



மேலும் காதலர் தினமான இன்று கோவை பெரியார் படிப்பகத்தில் இந்து மதத்தை சேர்ந்த கௌதம் மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ரீனா ஜெனிட்டா ஆகியோர் காதல் கலப்பு திருமணம் செய்து கொண்டனர்.



இதுகுறித்து பேசிய அந்த தம்பதி, மத ரீதியாக பல்வேறு இடர்பாடுகள் தங்களுக்கு வந்ததாகவும், அதனைத் தாண்டி தங்களுக்குள் இருந்த புரிதலால் திருமணம் செய்து கொண்டுள்ளோம்.

தற்போதைய காலத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் காதலை ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், ஒரு சில இடங்களில் ஜாதி, மதங்களை புரியாமல் சிலர் பின்பற்றி வருகின்றனர்.



அதனை தகர்க்கும் விதமாகவே நாங்கள் எவ்வித ஜாதி மதங்களையும் சாராமல் பெரியார் வழியில் திருமணம் செய்து கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...