தாராபுரத்தில் தமிழ் புலிகள் கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் நடக்கும் தீண்டாமை கொடுமைகளை தடுக்க கோரியும், தமிழகத்தில் கலவரத்தை தூண்டுகின்ற வடமாநிலத்தவர்களிடமிருந்து தமிழகத்தை பாதுகாக்ககோரியும் தமிழ் புலிகள் கட்சியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தாராபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் புலிகள் கட்சிகள் சார்பில், மாவட்டச் செயலாளர் குண்டடம் காளிமுத்து தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மேற்கு மண்டல துணைச்செயலாளர் ஒண்டிவீரன். வடக்கு மாவட்டச் செயலாளர் கனக சபாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், தமிழகத்தில் நடைபெறும் தீண்டாமை கொடுமைகளைத் தடுக்க கோரியும்,வடமாநில தொழிலாளர்களால் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும், தமிழகத்தில் கலவரத்தைத் தூண்டுகின்ற வடமாநிலத்தவர்களிடமிருந்து தமிழகத்தைப் பாதுகாக்கக் கோரியும், பனியன் நிறுவனங்களின் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான ஊதியத்தை அரசே நிர்ணயிக்க வலியுறுத்தப்பட்டது.



ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் வடிவேல், வழக்கறிஞர் அணி முருகையா பாண்டி, மாவட்ட பொருளாளர் ராமசாமி, தொகுதி துணைச் செயலாளர் சக்திவேல், குண்டடம் ஒன்றிய செயலாளர் மதன்குமார், குண்டடம் ஒன்றிய துணைச் செயலாளர் சரவணன், வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் அபிஷேக் மற்றும் பழனிச்சாமி, சிவக்குமார், சந்தோஷ், செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...