தாராபுரத்தில் தமிழ் புலிகள் கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் நடக்கும் தீண்டாமை கொடுமைகளை தடுக்க கோரியும், தமிழகத்தில் கலவரத்தை தூண்டுகின்ற வடமாநிலத்தவர்களிடமிருந்து தமிழகத்தை பாதுகாக்ககோரியும் தமிழ் புலிகள் கட்சியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தாராபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் புலிகள் கட்சிகள் சார்பில், மாவட்டச் செயலாளர் குண்டடம் காளிமுத்து தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மேற்கு மண்டல துணைச்செயலாளர் ஒண்டிவீரன். வடக்கு மாவட்டச் செயலாளர் கனக சபாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், தமிழகத்தில் நடைபெறும் தீண்டாமை கொடுமைகளைத் தடுக்க கோரியும்,வடமாநில தொழிலாளர்களால் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும், தமிழகத்தில் கலவரத்தைத் தூண்டுகின்ற வடமாநிலத்தவர்களிடமிருந்து தமிழகத்தைப் பாதுகாக்கக் கோரியும், பனியன் நிறுவனங்களின் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான ஊதியத்தை அரசே நிர்ணயிக்க வலியுறுத்தப்பட்டது.



ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் வடிவேல், வழக்கறிஞர் அணி முருகையா பாண்டி, மாவட்ட பொருளாளர் ராமசாமி, தொகுதி துணைச் செயலாளர் சக்திவேல், குண்டடம் ஒன்றிய செயலாளர் மதன்குமார், குண்டடம் ஒன்றிய துணைச் செயலாளர் சரவணன், வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் அபிஷேக் மற்றும் பழனிச்சாமி, சிவக்குமார், சந்தோஷ், செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...