மீண்டும் ஏறுமுகத்தில் ஆட்டோமொபைல் தொழில் - சந்தை மதிப்பீட்டாளர்கள் கருத்து!

நடப்பாண்டில் ஆட்டோமொபைல் தொழில் தொய்விலிருந்து மீண்டு வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைத்துள்ளதாக சந்தை மதிப்பீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் தேசிய அளவில் வாகன விற்பனை உயர்ந்திருப்பதாக வாகன முகவர் சங்கத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.


கோவை: கொரோனா பெருந்தொற்றால் கடந்த மூன்று வருடங்களாக முடங்கி கிடந்த தொழில்துறை சமீபத்தில் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றது. அதில், முக்கியத்துவம் வாய்ந்த தொழில்களில் ஒன்றாக இருப்பது ஆட்டோ மொபைல் வர்த்தகம்.

குறிப்பாக கோவிட் பெருந்தொற்றால் தொழில்கள் செய்ய முடியாத நிலையில், ஆட்டோ மொபைல் தொழில் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு உற்பத்தி குறைப்பு மற்றும் விற்பனை மந்தம் ஆட்டோமொபைல் தொழில் வளத்தையே ஆட்டிப் படைத்தது.



இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு ஜனவரியை ஒப்பிடும்பொழுது 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆட்டோ மொபைல் தொழிலுக்கு ஓரளவுக்கு கை கொடுத்து அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றிருக்கின்றது. அந்த வகையில், டெல்லியில் தேசிய அளவில் வாகன விற்பனை உயர்ந்திருப்பதாக வாகன முகவர் சங்கத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.

இரு சக்கர விற்பனை முந்தைய ஆண்டை விட நடப்பாண்டில் 14 % விற்பனை உயர்ந்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் இது அதற்கு முந்தைய ஆண்டுகளை விட 8 % குறைவு எனவும், 3 சக்கர வாகன விற்பனை பொறுத்தவரையில் கொரோனாவுக்கு முந்தைய நிலையை விட 3 சதவிகிதம் அதிகரித்துள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.



அதேபோல், பயணிகளின் கார் விற்பனை 22 சதவிகிதம் அதிகரித்துள்ளது. வர்த்தக வாகன விற்பனை 16 % உயர்ந்துள்ளது. பயணிகள் கார் விற்பனை சிறப்பாக நடைபெறுகிறது. அதேநேரத்தில் சிறிய கார்களின் விற்பனை சற்று தோய்வடைந்துள்ளது.



ஒட்டுமொத்தமாக பார்க்கும் பொழுது புள்ளிவிவரம் சற்று ஏறி இறங்கினாலும் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் தொழில் துறை என்பது மெல்ல மெல்ல வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்துவைத்துள்ளது.

கோவை, சென்னை போன்ற பெரு நகரங்களில் தொழில் நிறுவனங்களுக்கு ஆட்டோ மொபைல் சேவை என்பது அத்தியாவசியம் என்பதனால் இனிவரும் காலங்களில் சிறப்பான இடத்தை நோக்கி ஆட்டோமொபைல் வர்த்தகம் நகரும் என்று சந்தை மதிப்பீட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...