சொத்து வரி ரூ.1.25 கோடி நிலுவை - முன்னாள் எம்.பி-க்கு சொந்தமான கட்டிடத்தில் 3 கடைகளுக்கு சீல்!

கோவையில் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமிக்கு சொந்தமான சேரன் டவர் என்ற கட்டிடத்தில் 3 கடைகளுக்கான சொத்து வரி ரூ.1.25 கோடி நிலுவையில் இருந்ததால் மாநகராட்சி அதிகாரிகள் 3 கடைகளுக்கு சீல் வைத்தனர்.


கோவை: கோவையில் சுமார் ரூ.1.25 கோடி சொத்து வரி நிலுவை காரணமாக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமிக்கு சொந்தமான கட்டிடத்தில் 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

கோவை மாநகராட்சி சொத்து வரி வசூல் செய்வதில் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சொத்து வரி கட்டாத வணிக வளாகங்களில் இருக்கும் கடைகளுக்கு சீல் வைத்து வருகிறது.



இதனிடையே கோவை மாநகராட்சி எல்லைகளில் சமீப காலமாக சொத்து வரி கட்டாத கடைகளுக்கு நோட்டீஸ் வினியோகம் செய்து உள்ளது. இந்த நிலையில் ரூ.1.25 கோடி ரூபாய் வரி செலுத்தாமல் நிலுவையில் இருந்ததால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி., பழனிசாமிக்கு சொந்தமான சேரன் டவரில் உள்ள 3 கடைகளுக்கு கோவை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.



மேலும் சீல் வைத்த கடைகளுக்கு முன்பு சொத்து வரி கட்டாததால் சீல் வைத்ததாக நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்.



இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து வந்த கே.சி.பழனிசாமி மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனிடையே வளாகத்தில் உள்ள சில கடைகளை விற்பனை செய்து விட்டதாகவும், அதற்கான வரியை அந்த கடை உரிமையாளரே செலுத்துவார்கள் என தெரிவித்தார்.

ஆனால் விற்பனை செய்யப்பட்ட கடை உரிமையாளரின் பெயரில் பெயர் மாற்றம் செய்யப்படாமல் சேரன் டவர் பெயரிலேயே இருப்பதாக தெரிவித்துவிட்டு சென்றுள்ளனர்.

சொத்து வரி பாக்கியின் காரணமாக முன்னாள் எம்.பி. கேசி பழனிசாமிக்கு சொந்தமான கட்டிடத்தில் உள்ள 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...