உடுமலை அருகே விளைநிலங்களில் எரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் - மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம்!

உடுமலை அருகேயுள்ள சின்னவாளவாடி பகுதியில் விளைநிலத்தில் பஞ்சு கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால் வெளியேறும் துர்நாற்றத்துடன் கூடிய புகையால் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை விளைநிலங்களுக்கு அருகே எரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

உடுமலை அருகேயுள்ள சின்னவாளவாடி பகுதியில் சூரியப்பன் என்ற விவசாயிக்கு சொந்தமான விளைநிலம் உள்ளது. இந்நிலையில் அவர், தனது நிலத்தை விவசாயம் செய்வதற்கு ஏற்றார்போல், உழுது தயாராக வைத்திருந்துள்ளார்.



இதனிடையே அந்த நிலத்தின் அருகில் வசிக்கும் நபர்கள் ஒருவித பஞ்சு கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் என பல்வேறு கழிவுகளை மூட்டை மூட்டையாக கொட்டி இரவு நேரங்களில் தீ வைத்து எரித்து வருகின்றனர்.



இதன் காரணமாக சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு கிலோ மீட்டர் பரப்பளவில் கடும் துர்நாற்றத்துடன் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் முதியோர்கள் மூச்சுத் திணறால் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விளைநிலங்களில் மேயும் கால்நடைகள் மற்றும் விவசாய பயிர்களும் கடுமையாக பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், சுகாதார துறையினர் உடனடியாக சின்னவாளவாடி பகுதியில் உள்ள விளை நிலத்தில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் இறைச்சி கழிவுகளை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கழிவுகளை கொட்டிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...